Tuesday 29 September, 2009

ஒரு Science Fiction கவிதை

எல்லோரும் சயின்ஸ் பிக்சன் சிறுகதைகள் எழுதிகொண்டிருக்க,நான்
கொஞ்சம் வித்தியாசமாய் யோசித்ததன் விளைவே இந்த "அது 23 ம் நூற்றாண்டு"

அண்டமே விழாக்கோலம் பூண்டிருக்க,
இந்தியாவும் சீனாவும் இணைந்து நடத்திய
இரு பால்வெளித்திரள்களுக்கு இடையேயான
ஆளில்லா வான்கார் பந்தயத்தில்
இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
அனுமதிக்கப்பட்டவை ஒளியின் வேக கார்கள் மட்டும்.
இணையம்- 3 ன் நேரடி ஒளிபரப்பினை
ரசித்துக்கொண்டிருக்கும், இந்திய
ரோபோட் குடும்பங்களின் வாட்டமான முகம்
காட்டிக்கொடுக்கிறது, அந்த மாதம்
விநியோகிக்கப்பட வேண்டிய
boostup chargerகள், பல்வேறு
அரசியல் காரணங்களால் தள்ளிப்போடப்பட்டதை.
அது இருபத்து மூன்றாம் நூற்றாண்டின்
ஆரம்பகாலமாக இருக்கலாம் . .. 

Saturday 26 September, 2009

சினிமா விமர்சனம்-உன்னைப் போல் ஒருவன்



இந்தியாவின் இரண்டு தலை சிறந்த நடிகர்கள் இணைந்து நடிக்கும் - என்ற விளம்பர வாசகத்திலிருந்து படம் வேகம் எடுப்பதாகக் கொள்ளலாம். ஒரு சராசரி வாழ்க்கை வாழும் நடுத்தர வயது மனிதனுக்கும்(கமலஹாசன்), தனது கடமையை சரிவரச் செய்து வரும் காவல்துறை ஆணையருக்கும்(மோகன்லால்) இடையே நடக்கும் ஒரு நாளின் நிகழ்வுகள் தான் கதை.நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளில் சம்பந்தம் உடைய நான்கு தீவிரவாதிகளையும் விடுவிக்கும்படியும் இல்லாவிட்டால் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சக்தி வாய்ந்த பாம்களால் நகரத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் நகரின் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொண்டு காவல்துறை ஆணையருக்கு மிரட்டல் விடுக்கிறார் நம் common man.அப்போதில் இருந்து பரபரக்கிறது காவல் துறை.தான் சொன்னது உண்மை என்பதை நிரூபிக்க annasalai police station ல் தான் வைத்த bomb ஐ பற்றி தகவல் அளிக்கிறார்.matter is too serious என்பதை உணர்ந்த அதிகாரி ,CM(original CM வீட்டைக் காட்டுகிறார்கள்,குரல் போலி) மற்றும் home secretary(லக்ஷ்மி)ன் காதுகளுக்கு கொண்டு செல்கிறார். Negociation deal படி தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மற்ற குண்டுகள் இருக்குமிடத்தைக் கூறுவேன் என்கிறார்.இடையே இந்த நியூஸ் பரபரப்பாக media விற்கும் தீனி கொடுக்கிறார்.தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டார்களா, அவர்களை வைத்து நம் common man என்ன செய்கிறார் என்பது மீதி.
ஒரு உயரமான-கட்டி முடிக்கப்படாத கட்டிடம்,ஒரு லேப்டாப் ,ஒரு டிவி,ஒரு டெலிபோன்,பைனாக்குலர்,ஒரு மொபைல்,சில relaince சிம் கார்ட்ஸ் இவை இந்த பக்கம் கமல் கேரக்டர் சார்ந்த சுற்றுபுறம்.அந்த பக்கம் ஒரே ஒரு ரூம் ,சில கம்ப்யூட்டர்கள்,மற்றும் ஒரு போலீஸ் ஸ்டேஷன்.இவைகள் தான் கதையில் அதிகமாக வரும் லோக்கேசன்கள் .
சும்மா சொல்லக்கூடாது! கமல் ஹிந்தியில் வெளிவந்த A Wednesday திரைப்பட உரிமையை போட்டியினிடையே வாங்கி அதன் சாரம் மாறாமல் தமிழில் மிக நன்றாக ரீமேக்கியிருக்கிறார்.
  • சக்ரியின் Direction,விறுவிறுப்பின் வேகம் குறையாமையில்,பாத்திரதேர்விலும் (சந்தான பாரதி ,ராஜா தவிர-தீவிரவாதிகளை இப்படியும் தண்டிக்கலாம்) தெரிகிறது.
  • ஒளிப்பதிவில் பளிச் ரகம்.
  • இசையில் புலிக்கு பிறந்த சுருதி ஹாசனின் சில இடங்களில் வெறுமை(இசை இல்லாமை)யும் பல இடங்களில் தேவைக்கேற்பவும்.நடிப்பு கைவிட்டாலும் பிழைத்துக் கொள்ளுவார்.
  • இரா.முருகன்(அரசூர் வம்சம்,ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்) வசனத்தில் மிளிர்கிறார்(!).சிரிப்பூட்டுகிறது நிஜமாகவே நிறைய இடங்களில்.உ-ம்,மோகன்லால்,லக்ஷ்மி பேச்சுகள், அந்த IIT dropout hacker,டிவில பேச போலீஸ் மனப்பாடம் செய்து பேசுவது என்று,சுஜாதா தாக்கம்.வசனத்தில் கமல் உதவியிருப்பார் போல.
  • நடிப்பில் வழக்கம்போல் கமல்,மோகன்லால் அருமை.
  • ஆரிப் கானாக வரும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு இது இரண்டாவது படம்(முதல் படம்: அபியும் நானும்) தோற்றத்திலும் நடிப்பிலும் பின்னியெடுக்கிறார்.மின்னுவார் நல்ல கதை கிடைத்தால். அந்த இன்னொரு போலீசும்.
புதுமை : பாடல்களுக்கு தனி ஆல்பம்,ரெட் ஒன் கேமரா (என்று சொல்கிறார்கள்.)

நிறைவாக, நாலு பைட் ,ஐந்து பாடல்கள் ,தனி காமெடி ட்ராக்(நல்ல வேளை) இல்லா ,தரமான 110 நிமிஷ படம்.புதுமையான கதை,கடைசி வரை வேகத்தை குறைக்கவே இல்லை. R K Lakshman's common man அங்கே(you said it) அப்பாவியாக, இங்கே(படத்தில்) கொடுமைகளைக் கண்டு பொங்கி எழும் anti terrerist ஆக.
ஆக படத்தில் குறையாக,ஒரு போலீஸ் இன்னொரு போலீசை அடிப்பது duty ல் இருக்கும்போதே,பழைய குண்டு வெடிப்புச் சம்பவங்களை திரும்பத் திரும்ப (இரண்டு முறை ) நினைவு படுத்து(ஸ்ஸ்ஸப்பா)கிறார்கள்,இதெல்லாம் ஒரு குறையே இல்லை.என்ன, குப்பனுக்கும்,சுப்பனுக்கும் புரியாத பாஷையில் திரைப்படம் அவ்வளவுதான்.
அப்ப கருத்து : தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் தான் வெல்ல முடியுமாம் !

Tuesday 22 September, 2009

எனது கவிதைகள்

இயற்கையான தமிழ்

எண்திசையும் பரவிக் கிடக்கிறது இயற்கை
பச்சையாய்,நீலமாய்,
மஞ்சளாய்,வெண்மையாய்
என் தமிழ் போல்.
செடியும் பூக்களும்
கடலும் வானமும் ஆயின
தான் தோன்றிகள்,ஆயினும்
என் தமிழ் அதற்கு முன் தோன்றியதால்
முன்னும் என் மூதாதையர் வணங்க
பின்னும் நான் வணங்கி மிச்சமிருக்கும்
தாய்த்தமிழ் காண,
சந்ததியர் காத்திருக்கின்றனர் வரிசையில்..!


நீர்ப்பூக்கள்

* அதிர்வலைகளின்
அரசல் புரசலான செய்திகேட்டு
அக்கம்பக்கத்து பூக்கள் கண்சிமிட்டும்
மஞ்சள் பூவும்,சிவப்பு பூவும்
மருதலித்ததனால் விளங்கும்
தாயானதால் தேங்கிய தண்ணீருக்கும் சம்மதம்
பூவானம்,பூமழை, பூநிலம்
உதிர்த்த நீர்ப்பூக்கள்
ஒன்றாகிக் கொண்டாடும்
உயரம் பறந்தவைகள்
சல்லெனக் கீழிறங்கி
தண்ணீர் மோதிப்பின் உயரம் தொடும்
தவளைக் குதித்தாடிய குளத்தில்,
நிலத்தை  உற்றுநோக்கி
முணுமுணுக்கும் நிழல் ம் .. போதும் வாழ்க்கை
எதிர்கரையில் துணைப்பேச்சுக்கு ஆள் தேடும் வயதானகட்டை.


* சொந்த நிலம்,
சொந்த வீட்டுக்கனவுடன்
டவுனுக்கு வண்டியேறிய
திசை தெரியாப் பறவை
இல்லையென்றாலும்
(வாழ) வழி அறியாக் குழந்தைக்கு
பத்து வருட போராட்டத்தில்
இப்போதும் சொந்தமாயிருக்கிறது
காட்டுக் கொட்டாயிலிருந்த
மழைநேரத்தில், டீக்குடிக்கக்
கூட்டம் கூடும், கூரை ஒழுகும்,
அந்த சாக்குப்பை போர்த்திய புரோட்டாக்கடை.