Tuesday 29 September, 2009

ஒரு Science Fiction கவிதை

எல்லோரும் சயின்ஸ் பிக்சன் சிறுகதைகள் எழுதிகொண்டிருக்க,நான்
கொஞ்சம் வித்தியாசமாய் யோசித்ததன் விளைவே இந்த "அது 23 ம் நூற்றாண்டு"

அண்டமே விழாக்கோலம் பூண்டிருக்க,
இந்தியாவும் சீனாவும் இணைந்து நடத்திய
இரு பால்வெளித்திரள்களுக்கு இடையேயான
ஆளில்லா வான்கார் பந்தயத்தில்
இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
அனுமதிக்கப்பட்டவை ஒளியின் வேக கார்கள் மட்டும்.
இணையம்- 3 ன் நேரடி ஒளிபரப்பினை
ரசித்துக்கொண்டிருக்கும், இந்திய
ரோபோட் குடும்பங்களின் வாட்டமான முகம்
காட்டிக்கொடுக்கிறது, அந்த மாதம்
விநியோகிக்கப்பட வேண்டிய
boostup chargerகள், பல்வேறு
அரசியல் காரணங்களால் தள்ளிப்போடப்பட்டதை.
அது இருபத்து மூன்றாம் நூற்றாண்டின்
ஆரம்பகாலமாக இருக்கலாம் . .. 

No comments:

Post a Comment