Friday 2 October, 2009

கட்டுரை -எழுத்துப்பிழைகளும் வலைப்பூக்களும்

இன்றைய தேதியில் அனேகமாக இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லோரும் வலைப்பூக்களில் எழுதவும் செய்கிறார்கள். தங்களுக்கு
சொந்தமான வலைத்தளத்தில் அல்லது வலைப்பூவில் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட நிலையில்,போன வாரம் ஒருவர் டீக் குடிக்க தான் கடைக்கு நடந்து சென்றதை அவ்வளவு ஸ்வாரஸ்யமாக எழுதியிருந்தார்.நானும் கூட என் வீட்டு நாய், குட்டிகள் ஈன்றதை பதிவு செய்யலாம் என்று நினைத்த போது,நாய் மறுத்து விட்டது.

இணையத்தில் தங்களது எண்ணங்கள்,அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கில் blog ஆரம்பிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தன் மொழியின் பெருமையினை மறந்து,அது ஆங்கிலமோ தமிழோ தெரிந்தோ தெரியாமலோ எழுத்துப்பிழை எனும் அரக்கனை சாதாரணமாக தத்தமது எழுத்துக்களில் விடுதலை செய்து விடுகிறார்கள்.நான் தமிழில் நெட்டில் வரும் பத்திரிக்கைத்தளங்கள்,வலைப்பூக்கள்,தமிழாக்கங்கள் இன்ன பிறவற்றில் நிறைய எழுத்துப்பிழைகளை கவனித்தும் படித்தும் வருகிறேன்.தமிழில் எழுதும்போது எழுத்துப்பிழை,கருத்துப்பிழை,இலக்கணப்பிழை தோன்றுவது நம்மில் பலருக்கு இயல்பே எனினும் அவற்றை எளிதில் மறுபடி தோன்றாமல் திருத்திக்கொள்ள முடியும்.அதுவும் வலைப்பூ இடுகை இடுபவர்களில் சராசரியாக இருபது வயதைத் தாண்டியவர்கள் அதிகப்பேர் எனும்போது.இடுகைகளை Transliteration(மொழிஒலிபெயர்ப்பு?) செய்யும்போது இவ்வாறான பிழைகள் சகஜம்.வாசிப்பவர்கள் நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் என்றால் பிரச்சினை ஏதும் இல்லை,அவர்கள் அரைகுறையாளர் அல்லது இப்போதுதான் கற்பவர்கள் எனில் அவர்கள் தவறாக கற்றுக்(அ)புரிந்து கொள்ளக்கூடும்.அதற்கான காரணகர்த்தா அந்த குறிப்பிட்ட இடுகையை பதிவு செய்த நாமே.Mark Twain,Robert Louis Stevenson போன்றோர்க்கும் இந்தத் தொல்லைகள் இருந்திருக்கின்றன. அதனால்தான் Mark Twain இப்படிச் சொன்னார் போலும்:
"I don't give a damn for a man that can only spell a word one way."

பொதுவாக பொதுஜன வார,மாத இதழ்களில்,சில சமயம் டிவி சானல்களில் கூட இப்படிப்பட்ட பிழைகள் நிகழ்வதைக் காணலாம்.இத்தனைக்கும் அங்கெல்லாம் அச்சுபிழை ,எழுத்துப்பிழை என்று பல பிழைகள் திருத்துவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் .ஆனால் வலைப்பூக்களில் அப்படி proof reader,editor என்று யாரும் இல்லை,என்றாலும் கண்டிப்பாக எழுத்துப்பிழைகள் தூக்கிலேற்றப்படவேண்டியவைகளே.அதனதன் ஆசிரியர் தான் தவறுகளுக்கு முழு பொறுப்பு.

No comments:

Post a Comment